நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்

சிம்பாங் பூலாய்:

கம்போங் கெபாயாங் அருகே ஒரு குவாரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டிரெய்லர் லோரி பாறையால் நசுக்கப்பட்டதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று மாலை 5.18 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 53 வயதான சிவக்குமார் மருதமுத்து, டிரெய்லரின் முன்பகுதியில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகள் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத்,

அழைப்பு வந்தவுடன் சிம்பாங் பூலாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவினர், கோப்பெங் தீயணைப்புப் படையின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறினார்.

தீயணைப்புப் படையினர் மாலை 5.29 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, உடனடியாக அங்கு ஒரு ஆரம்பகட்ட மதிப்பீட்டை மேற்கொண்டனர்.

பின்னர், அதிகாரிகள் ஹைட்ராலிக் உபகரணங்களைப் பயன்படுத்தி, சிக்கிக்கொண்டிருந்தவரை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

சிக்கிக் கொண்ட சிறிது நேரத்திலேயே பாதிக்கப்பட்டவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.

ஆனால் அவர் இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset