நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில மஇகா மாநாட்டில் அர்விந்த் அப்பளசாமியின் மக்கள் சேவைக்கு அங்கீகாரம்

சுங்கை சிப்புட்:

பேரா மாநில மஇகா பேராளர் மாநாட்டில் மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவர அர்விந்த் அப்பளசாமியின் சேவை அங்கீகாரம் கிடைத்தது.

டான்ஸ்ரீ ராமசாமி தலைவராக கொண்ட பேரா மாநில மஇகா பேராளர் மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்றது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இம்மாநாட்டின் முக்கிய அங்கமாக பாகான் டத்தோ தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான அர்விந்த் அப்பளசாமி தலைவர்களால் சிறப்பு செய்யப்பட்டார்.

பேரா மாநிலம், பாகான் டத்தோ தொகுதி மட்டுமல்லாமல் நாடு தழுவிய அளவில் மக்களுக்கு அவர் சேவையாற்றி வருகிறார்.

குறிப்பாக அதிகமான இளைஞர்கள் மஇகாவில் இணைவதற்கு அவர் முன்னோடியாக விளங்குகிறார்.

இதன் அடிப்படையில் பேராளர்கள் முன்னிலையில் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset