நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்குவது குறித்து மலேசியா ஆராய்ந்து வருவதை பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார்

புது டெல்லி:

இந்தியாவின் பிரம்மோஸ் வான்-தரை ஏவுகணை அமைப்பை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 

மலேசிய விமானப்படையே முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாக இருப்பதால், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக நடைபெற்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பகமான உறவை எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்புத் திறன்களை அங்கீகரித்து, இந்த சாத்தியமான கொள்முதலுக்கு அன்வார் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

பிரம்மோஸ் ஏவுகணையானது, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (DRDO), ரஷ்யாவின் NPO மஷினோஸ்ட்ரோயேனியா ஆகியவற்றின் கூட்டு முயற்சித் தயாரிப்பாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset