நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியக் கடலில் காணாமல் போன கப்பலில் மலேசியர்கள் இருந்தனரா என்று விஸ்மா புத்ரா விசாரித்து வருகிறது

புத்ராஜெயா:

இந்தோனேசியாவின் ஜாவா கடலில் காணாமல் போனதாகக் கூறப்படும் 'விர்கோ டிரான்ஸ்போர்ட் 8' என்ற பயணிகள் கப்பலில் மலேசியர்கள் யாரேனும் இருந்தார்களா என்பதை விஸ்மா புத்ரா சரிபார்த்து வருகிறது.

கப்பலின் பயணிகள் பட்டியலைப் பெறுவதற்கும், சம்பவம் குறித்த விவரங்களைச் சரிபார்ப்பதற்கும் இந்தோனேசிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பலில் இருந்து 103 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த 140 பேரை இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

243 பேரை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மோசமான வானிலை காரணமாகத் தொடர்பை இழந்த பிறகு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset