செய்திகள் மலேசியா
தங்க ரத ஊர்வலத்துடன் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது
கோலாலம்பூர்:
தங்க ரத ஊர்வலத்துடன் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக தொடங்கியது.
மலேசியாவில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இதில் தலைநகரில் உள்ள கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் இந்த விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
அவ்வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று தங்க ரத ஊர்வலம் சிறப்பான முறையில் தொடங்கியது.
ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கொடியேற்றி சிறப்பித்தார்.
அதன் பின் விநாயகப் பெருமான் தங்க ரதத்தில் அமர்ந்து தலைநகரில் உள்ள வீதிகளில் வலம் வந்தார்.
இந்த தங்க ரத ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
அதே வேளையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாளையும் அதிகமான பக்தர்கள் இங்கு திரளாக வருவார்கள்.
அவர்களின் வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் உரிய வசதிகளை ஏற்பாடு செய்து தந்துள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 6:23 pm
இந்தோனேசியக் கடலில் காணாமல் போன கப்பலில் மலேசியர்கள் இருந்தனரா என்று விஸ்மா புத்ரா விசாரித்து வருகிறது
September 13, 2026, 3:35 pm
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் பிரதமர் அன்வார்
September 13, 2026, 2:52 pm
விமான மருத்துவர் சேவை ஒப்பந்தங்கள், ஹெலிகாப்டர் பயன்பாடு ஆகியவற்றை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்கிறது
September 13, 2026, 2:51 pm
பேரா மாநிலப் பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி: 42 குழுக்கள் பங்கேற்பு
September 13, 2026, 11:56 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: நிதியமைச்சு
September 13, 2026, 11:42 am
