செய்திகள் மலேசியா
அம்னோ தலைவர்களை அச்சுறுத்துவதற்காக ஒருமைப்பாட்டு அரசாங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளையும், அமலாக்க முகமைகளையும் பயன்படுத்தியதா?: ஃபஹ்மி மறுப்பு
கோலாலம்பூர்:
அம்னோ தலைவர்களை அச்சுறுத்துவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளும் அமலாக்க முகமைகளும் பயன்படுத்தப்படுகின்றன என்று சில தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் நிராகரித்தார்.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் அவர்,
எந்தவொரு வழக்கின் விசாரணையையும் தொடங்குவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ அமலாக்க முகமைகளின் விவகாரங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒற்றுமை அரசாங்க நிர்வாகமும் தலையிடாமல் மிகவும் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
தாபோங் ஹாஜி, பெல்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு உதாரணங்களைக் கூறி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அதை ஆணிவேர் வரை விசாரிக்க உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
அம்னோ தலைவர்களை அச்சுறுத்த நீதிமன்ற வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மையல்ல.
அது பிரதமரோ அல்லது கட்சியோ கூறியது அல்ல. மாறாக அது மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவு.
அரசாங்கம் மாமன்னரின் உத்தரவை நிலைநிறுத்த வேண்டும் என்று இன்று நடைபெற்ற மீடியா பிரிமா மெர்டேக்கா ஓட்டப்போட்டியில் பங்கேற்ற பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 11:56 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: நிதியமைச்சு
September 13, 2026, 11:42 am
போலிசார் மீது மோத முயன்ற காதல் ஜோடி கைது
September 13, 2026, 11:16 am
பிரதமர் - விஜய் சந்திப்பு; கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது: மைக்கி
September 13, 2026, 10:36 am
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
September 13, 2026, 10:32 am
பி40 மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து உயர்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்: ஜாஹித்
September 13, 2026, 10:28 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பிரச்சினை தீர்க்கப்படும்: ஜாஹித்
September 13, 2026, 8:16 am
ரஷ்யாவுடன் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயணம்: புடினிடம் அன்வார் கோரிக்கை
September 12, 2026, 11:21 pm
