நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாவா கடலில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; மலேசியாவிற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை 

கோலாலம்பூர்: 

இந்தோனேசியாவின் ஜாவா கடலில் இன்று அதிகாலை 5.23 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதன் மையப்பகுதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு வடக்கே சுமார் 117 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது

இந்த இயற்கை பேரிடரானது தரைமட்டத்திலிருந்து சுமார் 378 கிலோமீட்டர் ஆழத்தில் ஆழமாக உருவானதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் நிலைமையை மெட் மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset