நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் DNA முடிவுகள் கிடைக்கப்பெற்றன: உடல்கள் என்று ஒப்படைக்கப்படும்

மீரி: 

சரவாக் மாநிலத்தில் மருத்துவ பணியாளர்களை உட்படுத்திய ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் DNA முடிவுகள் கிடைக்கப்பெற்றுவிட்டன. 

இதன் காரணமாக பலியானவர்களின் உடல்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படும் என்று சரவாக் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் சைனால் அப்துல்லா கூறினார். 

ஆவணங்கள் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு அவரவர்களின் உறவினர்களுக்கு உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

கடந்த செவ்வாய்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த ஐவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் லாங் லெல்லாங் STOLport விமான நிலையத்தின் ஓடுபாதையின் இறுதிப் பகுதிக்கு அருகில் விமானம் விபத்துக்குள்ளானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset