நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெனோரா சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு: நிலைமையைக் கண்காணிக்கிறது PLUS நிறுவனம் 

கோலாலம்பூர்: 

நேற்று மதியம் வேளையில் மெனோரா சுரங்கப்பாதை அருகே திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 263.6இல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை PLUS நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில போலிஸ் தலைவர் அல்வி சைனால் அபிடின் கூறினார். 

இந்த நிலச்சரிவு காரணமாக எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மெனோரா சுரங்கப்பாதையை கடக்கும் சாலை பயனர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று அல்வி சைனால் அபிடின் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset