நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

200,000 க்கும் மேல் போலி கொள்முதல் மோசடிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை (DOE) எச்சரிக்கை

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை (DOE), தனது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அரசாங்க கொள்முதல் ஆணை மோசடிகள் தொடர்பான ஏமாற்று நடவடிக்கைகளைக் கண்டறிந்துள்ளது. இதன் விளைவாக, இரண்டு விநியோகஸ்தர்களுக்கு RM200,000-க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று 
 DOE இயக்குநர் ஷரிஃபா ஜகியா சையத் சாஹப் கூறினார்.

இந்த மோசடிகளில் போலியான ஆவணங்களும் போலி கடிதத் தலைப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த மோசடியைக் கண்டறியப்பட்டது. இதுபோல் வேறு யாரேனும் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் இருந்தால் அவர்கள் காவல்துறையில் புகார் அளிக்குமாறு துறை வலியுறுத்தியுள்ளதுடன், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையையும் இதில் ஈடுபடுத்தியுள்ளது.

இத்தகைய மோசடிகளுக்குப் பலியாகாமல் இருக்க, விநியோகஸ்தர்களும் ஒப்பந்ததாரர்களும் கொள்முதல் ஆவணங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஷரிஃபா தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset