செய்திகள் மலேசியா
புகார் முதல் இழப்பீடு வரை: மலேசியாவில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வரவேண்டும்: அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி
கோலாலம்பூர்:
பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (KPWKM) கீழ் செயல்படும் பாலியல் துன்புறுத்தல் தீர்ப்பாய முகமை (Tags), கடந்த இரண்டு ஆண்டுகளில் 134 பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பதிவு செய்து, அவற்றில் 90 வழக்குகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளது என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் Tags-இன் பங்கை வலியுறுத்திய அமைச்சர் ஆண்களும் குழந்தைகளும் இவர்களின் ஆதரவு சேவைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியான விழிப்புணர்வு, ஆதரவு முயற்சிகளுடன், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த விரிவான நடவடிக்கைகள் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய சம்பவங்களைப் புகாரளிக்குமாறும், தீர்வு காண்பதற்குத் தேவையான ஆதாரங்களைப் பாதுகாத்து வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:51 pm
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை
September 11, 2026, 3:32 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்; தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவிகளை வழங்குகிறது: டத்தோ இப்ராஹிம் ஷா
September 11, 2026, 2:09 pm
போதும் ஆசிரியரே: அன்வாரைச் சாடிய ஜாஹித் அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்
September 11, 2026, 2:08 pm
