நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரரசரின் மன்னிப்பு அதிகாரத்தை நம்பிக்கை கூட்டணி விமர்சனம் செய்ததில்லை: கெஅடிலான் இளைஞர் பிரிவு அறிக்கை 

கோலாலம்பூர்: 

நம்பிக்கை கூட்டணி ஒருபோதும் பேரரசரின் மன்னிப்பு அதிகாரத்தை விமர்சனம் செய்ததில்லை என்று கெஅடிலான் இளைஞர் படையின் தகவல்  பிரிவு தலைவர் டனிஷ் ஹைருதின் கூறினார். 

நம்பிக்கை கூட்டணி ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நீதிமன்ற முடிவுகள், சட்ட திட்டங்கள் போன்ற விவகாரங்களில் அதன் கவனத்தை கொள்ளுமே தவிர அரசவை அல்லது அரச கழகத்தின் விவகாரங்களைத் தொடாது என்று அவர் திட்டவட்டமாக சொன்னார். 

முன்னதாக, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், மாமன்னரின் மன்னிப்பு அதிகாரம் குறித்து கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்று அம்னோவைச் சேர்ந்த தலைமை செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி கேள்வி எழுப்பியிருந்தார். 

அவரின் இந்த கேள்வி நம்பிக்கை கூட்டணி- தேசிய முன்னணி இடையே பெரும் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

மாமன்னரின் மன்னிப்பு அதிகாரம் குறித்து நம்பிக்கை கூட்டணி ஒருபோதும் எந்தவொரு வாக்கியத்திலும் விமர்சனம் செய்யவில்லை என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset