செய்திகள் மலேசியா
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
ஷா ஆலாம்:
வீட்டுமனை முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை மேலாளர் சலுகைக்காக தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் புரிந்ததாக இரு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
ஷா ஆலாம் நீதிமன்றத்தில் எம்.ஏ.சி.சி விண்ணப்பத்தை பரிசீலித்த மாஜிஸ்திரெட் வான் நூரா நிசா ஙாடிரின், இந்த நீதிமன்ற தடுப்பு காவலை இரு நாட்களுக்கு விதித்தார்
முன்னதாக, சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் சந்தேக நேற்று மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சி தரப்பு தெரிவித்தது
அந்நிறுவனத்தின் தலைமை மேலாளராக இருந்த போது 2023, 2025 ஆண்டுகளில் தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாக சந்தேக நபர் குற்றங்களைப் புரிந்தார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது
சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி தலைவர் அஸ்வான் ரம்லி அவரின் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்ஷன் 23இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
September 10, 2026, 1:25 pm
