செய்திகள் மலேசியா
மித்ராவின் உயர்வு மடானி திட்டத்தின் கீழ் 159 வணிகர்களுக்கு 4.48 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
பிரிக்பீல்ட்ஸ்:
மித்ராவின் உயர்வு மடானி திட்டத்தின் கீழ் 159 வணிகர்களுக்கு இன்று 4.48 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
இந்திய வணிகர்களுக்கு கைகொடுக்கும் நோக்கில் மித்ராவின் கீழ் இந்த உயர்வு மடானி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு நிதிகள் கிராண்டாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிதியை கொண்டு வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பாக இந்நிதியை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 159 இந்திய வர்த்தகர்களுக்கு உயர்வு மடானி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 4.486 மில்லியன் ரிங்கிட் நிதி அவ்வணிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிதி நிச்சயம் வணிகர்களுக்கு பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
மித்ராவின் உயர்வு மடானி திட்டத்திற்கு இந்திய வணிகர்களிடம் இருந்து பெருமளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதனால் மித்ராவின் உயர்வு மடானி 2.0 திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 25 மில்லியன் ரிங்கிட்டை மித்ரா ஒதுக்கியுள்ளது.
வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்குள் வணிகர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திப்ண் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
September 10, 2026, 1:25 pm
