நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி 

கோலாலம்பூர்: 

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமை அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை ஆட்சியிலிருந்து அகற்றும் ஆவணத்தை கட்டாயப்படுத்தப்பட்டு கையொப்பமிட்டதாக கூறியது தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது. 

அம்னோ பொதுப்பேரவையின் நடுவே இஸ்மாயில் லாசிம் தம்மை சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று எண்ணுவதாக அஹ்மத் ஸாஹித் ஹமிடி குறிப்பிட்டார். 

முன்னதாக நெகிரி செம்பிலான் ஆட்சியாளரை ஆட்சியிலிருந்து அகற்றும் விவகாரத்தில் இஸ்மாயில் லாசிம் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலை மந்திரி பெசார் மறுத்துள்ள நிலையில் இது குறித்து போலிஸ் புகார் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். 

நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி தலைமையிலான மாநில அரசாங்கம் ஆட்சியை வழிநடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset