நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி 

கோலாலம்பூர்: 

மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதிப்படுத்தினார். 

இருப்பினும், மன்னிப்பு வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் ஹன்னா இயோ மேலதிக தகவல்களை வழங்க மறுத்தார். 

முன்னதாக மன்னிப்பு வாரியம் அதன் கூட்டத்தை இந்த வாரத்தில் நடத்தவுள்ளதாக இதற்கு முன் FMT செய்தி தளம் செய்தியை வெளியிட்டிருந்தது. 

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு தொடர்பான விண்ணப்பம் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காஜாங் சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார். 

72 வயதான நஜிப் ரசாக், எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல்  வழக்கில் 42 மில்லியன் ரிங்கிட் மோசடி புரிந்ததாக அவருக்கு 12 ஆண்டுகள் சிறை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது 

அதன்பிறகு கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் அவரது சிறைத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகப் பாதியாகக் குறைத்து, அபராதத்தையும் RM50 மில்லியனாகக் குறைத்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset