நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு ஒருபோதும் மறக்கவில்லை என்று அதன் தலைவர் நோராய்னி அஹ்மத் கூறினார்.

அம்னோ முன்னாள் தலைவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்காக நீதி, கருணையின் கதவு திறக்கப்பட நாங்கள் எப்போதும் பிரார்த்தனை செய்வோம்.

இன்று அம்னோ மகளிர் பொதுப் பேரவையை ஒட்டி ஆற்றிய தனது கொள்கை உரையில்,

அம்னோ, நாட்டிற்காக தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை தியாகம் செய்த முந்தைய தலைவர்களில் நஜிப்பும் ஒருவர் என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தை உருவாக்க நாம் வரலாற்றை அழிக்க வேண்டியதில்லை.

மேலும் தேசிய வளர்ச்சி, பொருளாதார மாற்றம், உள்கட்டமைப்பு, மக்களுக்கு உதவி மற்றும் அம்னோவின் போராட்டம் ஆகியவற்றில் நஜிப்பின் பங்களிப்புகள், அரசியல் மாறிவிட்டது என்பதற்காக மட்டும் மறுக்க முடியாத நாட்டின் பயணத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset