நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளுவாங்கில் வீடு தீ பற்றி எரிந்ததில் தாயும், 2 மகன்கள் உயிரிழந்தனர்

குளுவாங்:

தாமான் தித்திவாங்சாவில் உள்ள இரண்டு மாடி அடுக்கு வீட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தாயும் அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 49 வயதான நொரைனி இப்ராஹிம், 18 வயதான கைருல் நூர் ஹாஜிக் கைருல்நிஜாம் 11 வயதான கைருல் நூர் ஹதிஃப் கைருல்நிஜாம் ஆகியோர் அடங்குவர்.

ஜொகூர் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10.44 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.

சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு குளுவாங் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 14 பேர் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 அடிக்கு 70 அடி அளவுள்ள இரண்டு மாடி அடுக்கு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் கட்டமைப்பில் சுமார் 50% எரிந்து நாசமானது.

வீட்டிற்குள் மூன்று பேர் சிக்கியிருந்தனர், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சு அதிகாரிகள் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதை உறுதி செய்தனர் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset