செய்திகள் மலேசியா
ரோஹிங்கியா ஐநா அகதிகள் அட்டை வைத்திருப்பவர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல: டத்தோ ஜக்காரியா
கோலாலம்பூர்:
ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையத்தின் (ஐநா) அட்டைகளை வைத்திருக்கும் ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தப்படவில்லை.
மேலும் அவர்கள் மலேசிய குடிநுழைவுத் துறையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள்.
பயண ஆவணங்கள் அல்லது செல்லாத பயணச்சீட்டு தொடர்பான குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து ஐநா அட்டை வைத்திருப்பவர்களுக்கு விலக்கு பாதுகாப்பு உள்ளது என்று குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் விளக்கினார்.
ரோஹிங்கியர்கள் சட்டவிரோத குடியேறிகளைப் போன்றவர்கள் அல்ல.
ஐநா அட்டைகளை வைத்திருப்பவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது அல்லது செல்லுபடியாகும் பயண ஆவணங்கள், பயணச்சீட்டுகள் இல்லாதது போன்ற குடிவரவுக் குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட முடியாது.
ரோஹிங்கியா அகதிகளின் நிலை குறித்து கருத்து கேட்க அவரைத் தொடர்பு கொண்டபோது, இருப்பினும், அவர்கள் மற்ற சட்ட அமலாக்க முகமைகளால் செயல்படுத்தப்படும் பிற சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 10:24 pm
எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட இருவரில் முன்னாள் பெல்டா தலைமை இயக்குநரும் அடங்குவார்
September 6, 2026, 10:21 pm
ஜொகூர், நெகிரி செம்பிலானில் தொடங்கிய 'நீல அலை' மலாக்காவிலும் தொடரும்: ஜாஹித்
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 12:52 pm
