நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காற்று மாசுபாடு குறியீடு 400-ஐத் தாண்டினால் அவசர நிலையை அறிவிக்க அரசு தயாராக உள்ளது

புத்ராஜெயா:

400க்கு மேல் காற்று மாசுபாடு குறியீடு (ஏபிஐ) அளவுகள் பதிவாகும் பகுதிகளில் அவசரநிலையை அறிவிக்க அரசு முன்மொழியக்கூடும்.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் இதனை கூறினார்.

மிகவும் அபாயகரமானது என வகைப்படுத்தப்படும் 400-க்கு மேற்பட்ட ஏபிஐ அளவுகள், நிலையான புகைமூட்ட மேலாண்மை நடைமுறைகளுக்கு இணங்க அவசரநிலை பிரகடனத்திற்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதுவரை, செரியான் மட்டுமே அபாயகரமான அளவுகளைப் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் கூச்சிங், சமரஹான், ஸ்ரீ அமான் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் மிகவும் ஆரோக்கியமற்ற அளவுகள் பதிவாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை செரியானில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம், ஏபிஐ பாதுகாப்பான நிலைக்குக் குறையும் வரை அமலில் இருக்கும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் பள்ளிகளை மூடுவது மற்றும் முகக்கவசம் அணிவது ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset