நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி

கோலாலம்பூர்:

16ஆவது பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றுக்கு இடையேயான இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள், இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களிடமே விடப்பட வேண்டும்.

அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இதனை கூறினார்.

கடந்த தேர்தலில் தாங்கள் வென்ற இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதில் ஒவ்வொரு கட்சிக்கும் நிச்சயமாக ஆர்வம் உண்டு.

ஆனால் அது தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையே ஒரு உடன்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்கக் கூடாது.

பாஸ் கட்சி தான் வென்ற இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது.

அம்னோவும் தான் வென்ற இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் அப்படித்தான்.

ஆனால் அவர்கள் கைகோர்க்க விரும்பினால், இரு தலைவர்களும் அதைப் பற்றிப் பேசட்டும்.

நான் இதில் தலையிட்டால், இது கடினமாகிவிடும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset