செய்திகள் மலேசியா
மீபா இளையோர் கால்பந்து போட்டி; இளம் விளையாட்டாளர்கள் திறமையை வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
ஜார்ஜ்டவுன்:
மீபா இளையோர் கால்பந்து போட்டி இளம் விளையாட்டாளர்கள் திறமையை வெளிப்படுத்தும் களமாக அமைந்துள்ளது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
மீபா - ஏய்ம்ஸ்ட் மாநிலங்களுக்கு இடையிலான, 12 வயதிற்கும் கீழ் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான 'தேசிய கால்பந்து போட்டி 2026' இன் தொடக்க விழாவிற்குத் தலைமையேற்று போட்டியைத் தொடக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பங்கேற்கும் சிறுவர்கள், சிறுமிகளின் இளம் கால்பந்து திறமைகளை ஒரே களத்தில் காணும் இந்தபோட்டி சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பினாங்கு போலோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இளம் விளையாட்டாளர்களின் திறமையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், குழு உணர்வு, தலைமைத்துவம், விடாமுயற்சி, விளையாட்டுப் பண்புகளை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாகவும் அமைகிறது.
இளம் கால்பந்து வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள். வெற்றியை மட்டுமல்ல, விளையாட்டின் மூலம் வாழ்க்கையையும் கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
September 5, 2026, 10:42 am
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி கவிழ்ந்ததால் அனைத்து வழிதடங்களும் பாதிப்பு
September 5, 2026, 10:19 am
சரவாக்கில் கடுமையான புகைமூட்டம்: ஐந்து நாட்களுக்கு 647 பள்ளிகள் மூடல்
September 5, 2026, 10:07 am
