நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழல் வழக்குகளில் விசாரணை செய்யப்பட வேண்டிய சந்தேக நபர் இனி ஆரஞ்சு நிற ஆடையை அணிய வேண்டியதில்லை: எம்.ஏ.சி.சி தகவல்

கோலாலம்பூர்: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழக்கு விசாரணைகளில் விசாரணை செய்யப்பட வேண்டிய சந்தேக நபர் இனி ஆரஞ்சு நிற ஆடையை அணிய வேண்டியதில்லை என்று எம்.ஏ.சி.சி தெரிவித்தது 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக அதன் தலைமை ஆணையர், டத்தோஶ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறினார். 

OKS எனப்படும் விசாரணை செய்யப்படும் நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து அண்மையக் காலங்களில் பல தரப்பிலிருந்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அந்த சூழலைக் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹலிம் அமான் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார். 

இருப்பினும் எம்.ஏ.சிசியின் சிறையில் இருக்கும் போது மட்டும் அவர்கள் இந்த ஆரஞ்சு நிற உடையை அணிந்திருப்பார்கள் என்று கூறப்பட்டது 

அதேவேளையில், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று எம்.ஏ.சி.சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset