நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி கவிழ்ந்ததால் அனைத்து வழிதடங்களும் பாதிப்பு 

கோலாலம்பூர்: 

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியின் புதிய NKVE நெடுஞ்சாலையில் நேற்றிரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது 

இந்த சாலை விபத்தில் லாரி ஒன்று கவிழ்ந்ததில் NKVE வழித்தடங்கள் மூடியதால் வடக்கு நோக்கிய போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.

கோழி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதாக  PLUS TRAFIK அறிவித்த வேளையில் தெற்கு நோக்கிய வலது பக்க வழியும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது 

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் சிக்கித் தவித்த சில பொதுமக்கள், விபத்துக்குள்ளான லாரி மற்றும் அப்பகுதியில் ஏற்பட்ட சேதங்களைச் சமூக வலைத்தளங்களில் படங்களாகப் பகிர்ந்துள்ளனர்.

அந்த லாரியில் கோழிகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் படங்கள் வைரலாகி வருகின்றன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset