நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி 

கோத்தா பாரு: 

கோத்தா பாரு- கெத்தேரே நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில் இரு சைக்கிளோட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக போலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியது. 

உயிரிழந்த இருவரும் 49 வயதுடைய  ஸம்ரி ரிஸ்மவடி மஹ்மெட் மற்றும் நிக் ஸாக்கி யமானி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இருவரும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இராஜா பெரெம்புவான் சைனாப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கிளாந்தான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் யூசோஃப் மாமாட் கூறினார். 

விபத்து குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset