நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் காலத்தைப் பற்றி கைரி, ஷாரில் கேள்வி எழுப்பியுள்ளனர்

கோலாலம்பூர்:

சமீபத்தில் பல தேசிய முன்னணி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளின் காலத்தைப் பற்றி அம்னோவைச் சேர்ந்த கைரி ஜமாலுடின், ஷாரில் ஹம்டான் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கெலுவார் செகேஜாப் என்ற ஒளிபரப்பின் சமீபத்திய அத்தியாயத்தில், சட்ட நடவடிக்கைகளுக்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால் எந்தவொரு தவறான செயலும் நிச்சயமாக விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று கைரி கூறினார்.

குறிப்பாக தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையேயான உறவு மேலும் மேலும் பதட்டமாகக் காணப்படும் நிலையில், குற்றச்சாட்டுகளின் காலம் குறித்த வதந்திகளைப் புறக்கணிக்க முடியாது.

அடுத்த பொதுத் தேர்தலில், நெகிரி செம்பிலானில் நாம் கண்ட ஏற்பாட்டைப் போல, நாங்கள் தேசியக் கூட்டணி இணைந்து செயல்படுவோம் என்று தேசிய முன்னணி ஒரு சமிக்ஞையை அளித்துள்ளது.

எனவே, வழக்குத் தொடருதல், விசாரணை போன்ற வடிவங்களில் ஒரு எதிர்வினை இருக்கும்  மக்கள் அவ்வாறு கூறுகிறார்கள் என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset