நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM1.7 பில்லியன் வரி வழக்கில் நஜிப், அவரது மகனுக்கு திவால் நடவடிக்கைக்குத் தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

புத்ரா ஜெயா:

புத்ராஜயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், அவரது மகன் டத்தோ முஹம்மது நஜிபுதீன் (Datuk Mohd Nazifuddin Mohd Najib) ஆகியோருக்கு திவால் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு, முந்தைய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்கிறது. மேலும், வருமான வரி சிறப்பு ஆணையர்களிடம் (SCIT) உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB) விதித்துள்ள கூடுதல் வரி மதிப்பீடுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறது.

வருமான வரி வாரியம், இருவரிடமிருந்தும் கணிசமான வரி நிலுவைத் தொகையை வசூலிக்க முயன்று வருகிறது. இதில் நஜிப்பிடம் இருந்து RM1.69 பில்லியனும், நஜிபுதீனிடம் இருந்து RM37.6 மில்லியனும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset