நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் கட்சிகளின் ஒருமித்த கருத்து தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும்: அஷ்ராப்

கோலாலம்பூர்:

மலாய் கட்சிகளின் ஒருமித்த கருத்து தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று அம்னோ பொதுச்செயலாளர் அஷ்ராப் வாஜ்தி டுசுகி கூறினா.

கிளந்தானின் பெங்கலான் செபாவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட தனது புகைப்படத்தை இன்று தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.

சிவப்பு நிற மலாய் உடை அணிந்திருந்த அவரது தோற்றம், வழக்கமாக வெள்ளை, பச்சை உடைகள் அணிந்திருந்த பாஸ் தலைவர்களிடமிருந்து மேடையில் மாறுபட்டுக் காணப்பட்டது.

மதம், இனம், தேசத்திற்காகப் போராடும் முயற்சியில், இரண்டு மிகப்பெரிய மலாய் கட்சிகளுக்கும் இடையிலான ஒருமித்த கருத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான ஒரு உறுதிப்பாட்டை அவரது பங்கேற்பு பிரதிபலிப்பதாக அம்னோ விவரித்தது.

இரண்டு மிகப்பெரிய மலாய் கட்சிகளான உம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருமித்த கருத்து தொடர்ந்து வலுப்பெற்று, மதத்திற்காகப் போராடுவதிலும், இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதிலும், நாட்டின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதிலும் பெரும் நன்மைகளை வழங்கட்டும் என்று அஷ்ராப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset