செய்திகள் மலேசியா
சரவாக்கில் உடனடியாக மேக விதைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்: ஜாஹித்
ஷாஆலம்:
புகைமூட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சரவாக்கின் ஐந்து இடங்களில் அரசாங்கம் மேக விதைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவராகவும் உள்ள ஜாஹித்,
மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் காற்று மாசுபாடு குறியீட்டுஅளவுகள் கிட்டத்தட்ட 500 ஆகப் பதிவாகியுள்ளது.
இது அபாயகரமான நிலை என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தேசிய பேரிடர் மேலாண்மை முகமை, மலேசிய வானிலை ஆய்வுத் துறை, மலேசிய அரச விமானப்படை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
சரவாக்கின் மத்தியப் பகுதியில் புகைமூட்டத்தின் அளவு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
சில இடங்களில் ஏபிஐ அளவு ஏறக்குறைய 500-ஐ எட்டியுள்ளது. கூடிய விரைவில் நாங்கள் மேக விதைப்புப் பணியை மேற்கொள்வோம்.
குறிப்பாக இந்த அபாயகரமான நிலையில் உள்ள பகுதிகளில், காற்றின் வேகம் மிகவும் ஆபத்தான இடங்களுக்குச் செல்லும் வகையில் மெட் மலேசியாவிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறுவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2026, 1:36 pm
திருநங்கைகள் அழகுப் போட்டியில் பங்கேற்ற மலேசியரை சமய விவகாரத் துறை அமைச்சர் கண்டித்தார்
September 1, 2026, 12:54 pm
கோபமில்லை, சூடாக உள்ளேன்; குத்தகையாளர்களுக்கு தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினை: டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கண்டனம்
September 1, 2026, 12:45 pm
அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்
September 1, 2026, 12:37 pm
இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு
September 1, 2026, 11:09 am
ஆறு மாதங்களில் 2 லட்சம் வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்துகிறது
September 1, 2026, 10:45 am
செந்தோசாவில் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்: குணராஜ்
September 1, 2026, 10:05 am
குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி
September 1, 2026, 9:51 am
