செய்திகள் மலேசியா
ஆறு மாதங்களில் 2 லட்சம் வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்துகிறது
டாக்கா:
அடுத்த ஆறு மாதங்களில், பல்வேறு ஏஜென்சிகள் மூலம் வங்காளதேசத்தில் இருந்து சுமார் 2 லட்சம் தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்தும்.
இந்தக் கட்டம் கட்டமான ஆட்சேர்ப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்று வங்காளதேச உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் மிர் ஷாஹே ஆலம் கூறினார்.
மலேசியாவில் சுமார் 8 லட்சம் பதிவு செய்யப்பட்ட வங்காளதேச தொழிலாளர்கள் உள்ளனர்.
அவர்களில் சிலர் பதிவு செய்யப்படாதவர்கள்.
அவர்களைப் பதிவு செய்யுமாறு மலேசிய அதிகாரிகளிடம் எங்கள் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்காளதேசத்திற்கான மலேசிய தூதர் ஷுஹாதா ஒத்மான், உள்ளாட்சி, வெளிநாட்டு மேம்பாடு, கூட்டுறவுத் துறை அமைச்சர் அப்துல் மொயீன் கானை சந்தித்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த ஜூன் மாதம், வங்காளதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, வங்காளதேசத் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் சந்தையை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2026, 12:54 pm
கோபமில்லை, சூடாக உள்ளேன்; குத்தகையாளர்களுக்கு தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினை: டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கண்டனம்
September 1, 2026, 12:45 pm
அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்
September 1, 2026, 12:37 pm
இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு
September 1, 2026, 10:45 am
செந்தோசாவில் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்: குணராஜ்
September 1, 2026, 10:05 am
குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி
September 1, 2026, 9:51 am
தேசிய தினக் கொண்டாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்த நாயகர்களை ஃபஹ்மி பாராட்டினார்
August 31, 2026, 10:39 pm
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னாள் பிரதமர்களை அழைக்கும் வழக்கம் இல்லை
August 31, 2026, 10:37 pm
புத்ராஜெயா சுதந்திர தின கொண்டாட்டங்களில் துன் மகாதீர் பங்கேற்றார்
August 31, 2026, 10:36 pm
