நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு

புத்ராஜெயா:

தேசியப் பதிவு இலாகா தற்போதுள்ள அடையாள அட்டை கட்டமைப்பிலிருந்து புதிய தலைமுறை அடையாள அட்டைக்கு மாறும் ஒரு மாற்றச் செயல்பாட்டில் உள்ளது. 

இதனால் நாடு தழுவிய அடையாள அட்டை அச்சிடும் செயல்பாடுகளில் தற்காலிக இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடையாள அட்டை அச்சிடும் செயல்பாடுகளில் ஏற்படும் இந்தத் தற்காலிக இடையூறு, இன்று தொடங்கி செப்டம்பர் 7 வரை நீடிக்கும் என தேசியப் பதிவு இலாகா இன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தங்களது அடையாள அட்டையை மாற்றவோ அல்லது பதிலீடு செய்யவோ அவசரத் தேவை இல்லாத பொதுமக்கள், இந்தக் காலகட்டத்தில் அவ்விஷயத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தேசியப் பதிவு இலாகா அறிவுறுத்துகிறது.

12 வயதுடைய குழந்தைகளின் முதல் அடையாள அட்டை விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், எதிர்காலத்தில் புதிய தலைமுறை அடையாள அட்டை வழங்கல் தொடங்கும் போது, ​​அக் குழந்தை அதைப் பெறுவதற்குச் சிறிது காலம் காத்திருக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset