நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி

குவந்தான்:

குவந்தான் அருகிலுள்ள கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் (LPT1) 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் ஒரே காரில் பயணித்த ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகியோரும், மற்றொரு வாகனத்தில் பயணித்த ஒரு ஆணும் அடங்குவர்.

பகாங் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு இரவு 10:44 மணிக்கு அவசர அழைப்பு வந்தது; மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட அனைவரையும் வாகனங்களிலிருந்து மீட்டனர். 

எனினும் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்தில் ஒரு பேருந்தும் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், அதில் பயணித்த 30 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக இருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset