நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்

கோத்தாபாரு:

வரும்  செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கும் அம்னோ பொதுப் பேரவையில் கலந்துகொள்ளுமாறு அம்னோவிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாக பாஸ் (PAS) உறுதிப்படுத்தியுள்ளது.

ஆக அப் பேரவையில் கலந்துகொள்பவர்களில் தானும் ஒருவராக இருப்பேன் என்பதை பாஸ் பொதுச் செயலாளர், டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனக்கு இன்று அழைப்புக் கடிதம் கிடைத்தது. அந்த அழைப்புக் கடிதம் பாஸ் தலைவர், பொதுச் செயலாளர், மேலும் இரண்டு தலைவர்களுக்கு முகவரியிடப்பட்டுள்ளது.

நாங்கள் கலந்துகொள்வதை உறுதி செய்கிறேன். நானும் கலந்துகொள்வேன். 

தலைவரால் கலந்துகொள்ள முடியாவிட்டால், நாங்கள் ஒரு பிரதிநிதியை அனுப்புவோம். 

மற்ற இரண்டு தலைவர்களைப் பற்றி பின்னர் முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset