நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்பு ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்படும்: பிரதமர்

புத்ராஜெயா:

அனைத்து வகை பள்ளிகளின் பராமரிப்புக்கான அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீடு, 1 பில்லியனிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டாக அதாவது 50 சதவீதம் அதிகரிக்கப்படும்.

பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இதனை அறிவித்தார்.

தேசியப் பள்ளிகள், சீன, தமிழ்ப்பள்ளிகள், சமயப் பள்ளிகள், தஹ்ஃபிஸ், போண்டோக், சிறப்பு கல்வி ஆகியவற்றுக்கு சிறப்பு முன்னுரிமையுடன் அனைத்துப் பள்ளிப் பிரிவுகளும் இதில் அடங்கும்.

அனைவருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

கல்வியமைச்சு அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலிப்பதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொள்வதற்கும் பணிகளை ஏற்பாடு செய்யும்.

அடுத்த ஆண்டு வரை நாங்கள் தாமதப்படுவதை விரும்பவில்லை.

புத்ராஜயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 தேசிய தின பிரதமர் உரையின்போது தனது உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset