நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாளம் வெள்ளம்: மலேசியா காத்மாண்டுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது

ஹைதராபாத்:

ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பரவலான அழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்யும் வரை, மேலும் பல நாடுகளிடமிருந்து தேடுதல், மீட்பு உதவிகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை நேப்பாளம் இன்னும் முடிவு செய்யவில்லை.

புதன்கிழமை போதே கோஷி, திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அதன் மத்திய, வடக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவுகளுடன் போராடி வரும் நிலையில், நேப்பாளம் ஏற்கனவே ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, தென் கொரியாவிடமிருந்து தேடுதல், மீட்பு உதவிகளைப் பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் தேடல், மீட்பு நடவடிக்கையில் நேபாளத்திற்கு உதவி வழங்கும் பல நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

சிறப்பு மலேசிய தேடல் மற்றும் மீட்புக் குழுவை அணி திரட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, நேபாளத்திற்கான உதவிகளை வழங்குவதை மலேசியா ஒருங்கிணைத்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகக் கூறியிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset