நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்

புனோல்:

ஸ்பெயினின் புனோல் (Buñol) நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘லா டொமாட்டினா’ (La Tomatina) தக்காளித் திருவிழா மீண்டும் களைகட்டியது.

ஆயிரக்கணக்கானோர் ஒருவர்மீது ஒருவர் தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர்.

தக்காளிகளை ஏற்றிய லாரிகள் கூட்டத்தின் நடுவே செல்ல, அவற்றிலிருந்தும் தக்காளிகள் அள்ளி வீசப்பட்டன.

பாடல்கள் ஒலிக்க, பங்கேற்பாளர்களின் வெள்ளை ஆடைகள் விரைவிலேயே சிவப்பு நிறமாக மாறின.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தக்காளிச் சண்டை. சுமார் 20,000 பேர். 

கடந்த மூன்று ஆண்டுகளில் பங்கேற்றவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் என்று ஸ்பெயினின் EFE செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அண்மைக் காலங்களில் இந்தியர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

2011ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ‘Zindagi Na Milegi Dobara’ அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset