நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு

சிங்கப்பூர்:

சிங்கப்பூர்க் கடலோரக் காவல் படை இன்னும் ஐந்தாண்டில் ஜொகூர் நீரிணையில் சுற்றுக்காவலுக்கு முழுமையாக ஆளில்லா கப்பல்களை நிறுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கடல்பகுதிகளில் அடையாளம் தெரியாத கப்பல்களைக் கண்டுபிடிக்கவும் சந்தேகத்துக்குரிய கப்பல்களைத் திருப்பி அனுப்பவும் புதிய ஆளில்லா கப்பல்கள் உதவ முடியும்.

கடத்தல் போன்ற கடல் போக்குவரத்து அச்சுறுத்தல்கள் மாறிவருவதால் தொழில்நுட்ப வேகத்துக்கு ஈடுகொடுப்பது அவசியம் என்று கடலோரக் காவல் படைத் தளபதி கூறினார்.

தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்கள் சிங்கப்பூரைத் தாண்டிச்செல்கின்றன.

கடந்த பத்தாண்டாக ஆளில்லா கப்பல்களை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.

கடந்த மார்ச் முதல், வாரத்துக்கு இருமுறை ஆளில்லா கப்பல்கள் சுற்றுக்காவலில் பயன்படுத்தப்படுகின்றன.

 ஆதாரம்: Mediacorp

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset