நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசு சூதாட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை: பிரதமர்

பெர்மாத்தாங் பாவ்:

மடானி அரசு சூதாட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை.

ஆனால் சிறப்பு எண் கணிப்பு குலுக்கல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அச்செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உறுதி கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

தான் நாட்டின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற உடனேயே, மடானி அரசு ஆண்டுக்கு 22 முறை நடத்தப்படும் குலுக்கல்களின் எண்ணிக்கையை வெறும் எட்டு முறையாகக் குறைத்ததாகக் கூறினார்.

அன்வர் ஒரு சூதாட்டக்காரர் என்று மக்கள் கூறுகிறார்கள். நான் (உண்மையில்) சூதாட்டக்காரர்களை ஆதரிப்பதில்லை.

நான் பிரதமராக ஆவதற்கு முன்பு, முந்தைய அரசு உத்தரவிட்டபோது, ​​ஆண்டுக்கு 22 முறை (எண் கணிப்பு) குலுக்கல்கள் நடத்தப்பட்டன.

நான் அதை படிப்படியாகச் செய்தேன். வருடத்திற்கு 22 முறை என்பதிலிருந்து எட்டு முறையாகக் குறைத்தேன்.

ஆனால் என்னை எதற்காகச் சபிக்கப் பார்க்கிறீர்கள்? என எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset