நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீண்ட விடுமுறையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கோலாலம்பூர்:

வார இறுதி, நீண்ட விடுமுறையால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பள்ளி விடுமுறைகள்,  தேசிய தின நீண்ட வார இறுதியை முன்னிட்டு இன்று மாலை வாகனங்கள் அதிகரித்ததால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மெதுவாகவும் நெரிசலாகவும் இருந்தது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிய போக்குவரத்து சுங்கை பூலோவிலிருந்து புக்கிட் பெருந்துங் நோக்கி மெதுவாக நகர்கிறது என்று பிளஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

புக்கிட் தாகர் முதல் லெம்பா பெரிங்கின் வரை; சுங்காய் முதல் சிம்பாங் பூலாய் வரை; சங்கட் ஜெரிங் முதல் தைப்பிங் உத்தாரா; புக்கிட் மேரா முதல் பண்டார் பாரு வரை,  பெர்டாம் நோக்கி பெர்மாடாங் பாவ் நெரிசல் நீடிக்கிறது.

தெற்கு நோக்கிய போக்குவரத்து பாங்கியில் இருந்து சவுத்வேலி நோக்கியும், நீலாய் உத்தாராவில் இருந்து பெடாஸ் லிங்கி வரையிலும் நெரிசல் ஏற்பட்டது.

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில், கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கெண்டிங் செம்பா நோக்கியும், லெண்டாங்கிலிருந்து பெந்தோங் நோக்கியும் கிழக்குக் கடற்கரை செல்லும் போக்குவரத்து மெதுவாக இருந்தது.

வெள்ளத் தணிப்பு சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, லன்சாங்கிலிருந்து தெமர்லோ வரை சில போக்குவரத்து நெரிசல்கள் பதிவாகின.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset