நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முறையான ஆவணங்கள் இன்றி வனவிலங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது 

கோத்தா பாரு: 

முறையான ஆவணங்கள் இன்றி வனவிலங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார் 

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று வனவிலங்கு குற்றப்பிரிவு மற்றும் கடல்சார் போலிஸ் படை இணைந்து ஒரு வளாகத்தில் சோதனையை மேற்கொண்டனர். 

அந்தச் சோதனையின்போது முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த சில வனவிலங்கு இனங்கள் அதிகாரிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட அந்த வனவிலங்குகளில் BURUNG AYAM-AYAM, HELANG SIPUT மற்றும் சில பறவைகளும் அடங்கும். 

கைப்பற்றப்பட்ட அனைத்து வனவிலங்குகளின் மொத்த மதிப்பு சுமார் 36,350 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வளாகத்தில் வசித்து வந்த நபர் ஒருவர், இந்த விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010-இன் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset