நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மறைவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் 

கோலாலம்பூர்: 

நாட்டின் எதிர்கட்சி  தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மரியம் காசிம் காலமானதை அடுத்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார். 

இந்த இக்கட்டான சூழலில் ஹம்சா சைனுடின் உறுதியாக இருக்க வேண்டும் என்று தாமும் தனது மனைவி டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பிரார்த்தனை செய்வதாக அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார். 

மரியம் காசிம் தமது 90ஆவது அகவையில் காலமானார். 

அவர் சுபாங்கில் உள்ள USJ 22இல் அமைந்துள்ள இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset