நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் ரொம்பினில் பயங்கர சாலை விபத்து: ஓர் ஆசிரியரும் அவரின் மகனும் பலி 

குவாந்தான்: 

நேற்றிரவு பகாங் மாநிலத்தின் ரொம்பின் பகுதியில் பயங்கர சாலை விபத்து ஒன்று  நிகழ்ந்தது.  இந்த சாலை  விபத்தில் ஒரு பெண் ஆசிரியையும் அவரது ஆறு வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்

இந்தச் சம்பவம் ரொம்பின்,  ஜாலான் குவாந்தான் - சிரம்பான் சாலையில் நிகழ்ந்தது. இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர்கள் Kartinie Ngatenan (வயது 46) மற்றும் அவரது மகன் Akif Azmi (வயது 6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் Kartinie Ngatenan ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.

அவர்கள் பயணித்த MPV ரக வாகனம்  திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.  இதனால் அந்த வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் பாய்ந்து கவிழ்ந்தது.

விபத்து நிகழ்ந்தபோது குடும்பத்தினர் சிரம்பானில் இருந்து Felda Keratong நோக்கிப் பயணிக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் பயணம் செய்த வாகனம் சாலையில் கிடந்த ஒரு மரத்துண்டின் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த எதிர்பாராத மோதலால் வாகனத்தை ஓட்டிய டிரைவரால் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முடியவில்லை. வாகனம் நிலைதடுமாறி சாலையின் வலது பக்கமுள்ள பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் காரை ஓட்டிய 47 வயது கணவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு Muadzam Shah மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது குறித்துத் தொடர்ந்து மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset