செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி வாரியத்தின் வழக்கு விசாரணை: ஐந்து விசாரணை அறிக்கைகள் திறப்பு
கோலாலம்பூர்:
அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டது போல தபோங் ஹாஜி வாரியத்தின் வழக்கு விசாரணை தொடர்பாக போலிஸ் ஐந்து விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
இந்த தகவலை புக்கிட் அமான் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவு இயக்குநர் ருஸ்டி இசா கூறினார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு இதுவரை 127 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், மேலதிக வாக்குமூலங்களைப் பெற சாட்சியாளர்கள் விரைவில் அழைக்கப்படுவார்கள் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
இந்த விசாரணையானது 1965 தபோங் ஹாஜி சட்டம், 1965 நிறுவன சட்டம் மற்றும் 2001 கள்ளப்பண பரிமாற்றம் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதாக அவர் சொன்னார்.
அனைத்து விசாரணைகளும் சுயேட்சையாகவும் நேர்மையாகவும் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதை போலிஸ் உறுதி செய்யும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 10:47 pm
14 வயது மாணவியின் மரணம் தொடர்பான பகடிவதை குற்றச்சாட்டுகள்; போலிஸ் விசாரித்து வருகிறது: ஃபாடில்
August 22, 2026, 10:43 pm
கேசியா நிஷாவிற்கு நீதி கிடைக்க அவரின் குடும்பத்தாருக்கு மஇகா துணை நிற்கும்: அண்ட்ரூ டேவிட்
August 22, 2026, 4:26 pm
மலேசியாவில் புகைமூட்டம் மோசமாகி வருகிறது
August 22, 2026, 11:28 am
பகாங் ரொம்பினில் பயங்கர சாலை விபத்து: ஓர் ஆசிரியரும் அவரின் மகனும் பலி
August 22, 2026, 10:07 am
மாணவி கேசியா நிஷா மரணம்; சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்: ஆண்ட்ரூ டேவிட்
August 22, 2026, 10:06 am
