நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

11 ஆண்டுகளுக்குப் பிறகு ரொனால்டினோ மீண்டும் களமிறங்குகிறார்

ரோம்:

2015இல் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிரேசிலிய ஜாம்பவான் ரொனால்டினோ, தனது விளையாட்டு வாழ்க்கையின் "300ஆவது கோலை" அடிக்கும் முயற்சியில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி மூன்றாம் டிவிஷன் கிளப்பான ரவென்னாவுடன் மீண்டும் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

2002இல் உலகக் கிண்ணத்தையும், 2005இல் பலோன் டி'ஓர் விருதையும் வென்ற 46 வயதான இவர், 
செப்டம்பர் 2015இல் பிரேசில் கிளப்பான ஃபுளூமினென்ஸிற்காக தனது இறுதி அதிகாரப்பூர்வ ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் தனது புகழ்பெற்ற விளையாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் என் அணி வீரர்களுடன் இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களால் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒரு அணி எங்களிடம் உள்ளது.

நான் விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்களா? எனக்குத் தெரியாது, மேலாளருக்கு மட்டுமே தெரியும்.

இத்தாலிக்குத் திரும்புவது அற்புதமானது, என் அணி வீரர்கள் வெற்றி பெற உதவவே நான் இங்கு வந்துள்ளேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset