நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியான் கிண்ணம்: ஹரிமாவ் மலாயா அணியின் கனவு தகர்ந்து போனது

கோலாலம்பூர்:

நடப்புச் சாம்பியனான வியட்நாமிடம் மொத்தத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஆசியான் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற ஹரிமாவ் மலாயா அணியின் கனவு தகர்ந்து போனது.

கோலாலம்பூர் கால்பந்து அரங்கில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து, மைடின் அரங்கில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தான் செங் ஹோ தலைமையிலான அணியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட மீள் வருகை கைகூடவில்லை.

அவர்கள் மீண்டும் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தனர்.

இந்த முடிவு, கடந்த பதிப்பின் இறுதிப் போட்டியின் மறுபதிப்பாக அமைந்தது. இதில் வியட்நாம், தாய்லாந்தை எதிர்கொள்கிறது. 

தாய்லாந்து, சிங்கப்பூரை மொத்தத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஆசியான் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset