செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸி அமைதி காத்து வருகிறார்: ஹோயோஸ்
மியாமி:
இந்த மாதத் தொடக்கத்தில் தனது தந்தையை இழந்த கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, லியோனல் மெஸ்சி தற்போது அமைதியடைந்து வருகிறார்.
இந்தர்மியாமி தலைமைப் பயிற்சியாளர் கில்லர்மோ ஹோயோஸ் இதனை தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ், அர்ஜெண்டினாவின் ரொசாரியோவில் கடந்த ஆகஸ்ட் 8 அன்று தனது 68ஆவது வயதில் காலமானார்.
லியோனல் மெஸ்ஸி கடந்த வாரம் இன்டர் மியாமி அணிக்காக மீண்டும் களமிறங்கினார்.
லீக் கிண்ண போட்டியில் லியோனுக்கு எதிரான தோல்வியில் மாற்று வீரராகக் களமிறங்கிய அவர், ஞாயிற்றுக்கிழமை நாஷ்வில்லிக்கு எதிரான 4-1 என்ற கோல் கணக்கிலான தோல்வியில் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.
களத்தில் தன்னை வெளிப்படுத்தி, மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அவர், அமைதியாகவும் இருந்தார். அவர் சிறப்பாகக் காணப்பட்டார் என்று ஹோயோஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 9:48 am
முசியாலா இரண்டாவது முறையாக மயங்கி விழுந்தார்
August 18, 2026, 11:19 pm
சுக்மா மகளிர் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணி
August 18, 2026, 11:18 pm
சுக்மா கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கெடாவும் பெண்கள் பிரிவில் சிலாங்கூரும் தங்கப்பதக்கம் வென்றன
August 18, 2026, 9:04 am
கால்பந்தில் எனது கடைசி ஆண்டு: ரொனால்டோ
August 17, 2026, 5:09 pm
மலேசியாவில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் கபடி இடம் பெறுகிறது: அருள் பிரகாஷ்
August 17, 2026, 9:21 am
செராஸில் ஹரிமாவ் மலாயா அணி வீழ்ந்தது
August 17, 2026, 9:17 am
