செய்திகள் உலகம்
காஸாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்: 20 அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலி
காஸா:
கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 அப்பாவி பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர்
மத்திய பாலஸ்தீனத்தில் உள்ள நுசீரத் பகுதி மற்றும் காசா நகரத்தின் அல்-துஃபா சுற்றுப்புறங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த இரு வேறு தாக்குதல்களும் ஹமாஸ் போராளிகளையும் அவர்களின் தளபதிகளையும் இலக்காகக் கொண்டே நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கடுமையான பாதிப்புகளையும் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
காசா நகரத்தில் உள்ள காவல் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலில் இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனைச் சாவடி பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஒரு நெருக்கடியான பகுதியில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தீவிர தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதுடன், அப்பாவி மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 19, 2026, 5:48 pm
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்குச் சிறை, $45,000 அபராதம்
August 18, 2026, 4:01 pm
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தேசியநாள் பற்றுறுதி கொண்டாட்ட விழா
August 18, 2026, 12:08 pm
தென் பிலிப்பைன்ஸில் உள்ள மேல்நிலை பள்ளியில் துப்பாக்கி சூடு: இருவர் பலி
August 18, 2026, 10:37 am
Coca Cola உள்ளிட்ட குளிர்பான தயாரிப்புகளை Turkish ஏர்லைன்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது
August 17, 2026, 3:50 pm
ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை முடக்கம்; காசா அமைதி முயற்சிகள் தீவிரம்
August 17, 2026, 10:50 am
பிரேசிலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
August 16, 2026, 10:40 am
முனைவர் எச். எம். சலீமின் இரு நூல்களை மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை வெளியிட்டார்
August 15, 2026, 5:28 pm
