செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்குச் சிறை, $45,000 அபராதம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தவருக்கு 10 மாதச் சிறைத்தண்டனையும் 45,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் 34 வயது ரொய் டான் ஜுன் ஜியே (Roy Tan Jun Jie).
அபராதத்தைச் செலுத்த முடியவில்லை என்றால் அவர் கூடுதலாக ஆறு வாரம் சிறையில் கழிக்கவேண்டும்.
பணத்தால் ஈர்க்கப்பட்ட டான் ஒரு குற்றக் கும்பலில் சேர்ந்தார்.
2022ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் அக்டோபர் 2025 வரை கும்பல் மலேசியாவில் இருந்து பெறப்பட்ட மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தார் அவர்.
மலேசியாவில் இருந்த ஓர் அடையாளம் தெரியாத நபர் கும்பலை இயக்கியதாகச் சொல்லப்படுகிறது.
டான் ஒரு நாளுக்கு 15 முதல் 30 முறை மின்-சிகரெட்டுகளை விநியோகம் செய்தார்.
மாதந்தோறும் 4,000 வெள்ளி வரை பெற்றார்.
அதோடு அவர் தமது நண்பர்களின் சார்பாக மின்-சிகரெட்டுகளை வாங்கி பணம் சம்பாதித்தார்.
டான் சுமார் 45,000 வெள்ளி ஈட்டியதாகத் தெரிகிறது.
டான் போன்ற விநியோகிப்பாளர்கள் அங் மோ கியோ அவென்யூ 5இல் பொருள்களைப் பெற்றுக்கொள்வது வழக்கம்.
கடந்த ஆண்டு அக்டோபரில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியபோது டானும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர்.
57,000க்கும் அதிகமான மின்-சிகரெட்டுகளும் பாகங்களும் சிக்கின.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
August 18, 2026, 4:01 pm
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தேசியநாள் பற்றுறுதி கொண்டாட்ட விழா
August 18, 2026, 12:08 pm
தென் பிலிப்பைன்ஸில் உள்ள மேல்நிலை பள்ளியில் துப்பாக்கி சூடு: இருவர் பலி
August 18, 2026, 10:37 am
Coca Cola உள்ளிட்ட குளிர்பான தயாரிப்புகளை Turkish ஏர்லைன்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது
August 17, 2026, 3:50 pm
ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை முடக்கம்; காசா அமைதி முயற்சிகள் தீவிரம்
August 17, 2026, 10:50 am
பிரேசிலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
August 16, 2026, 10:40 am
முனைவர் எச். எம். சலீமின் இரு நூல்களை மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை வெளியிட்டார்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
