செய்திகள் உலகம்
தென் பிலிப்பைன்ஸில் உள்ள மேல்நிலை பள்ளியில் துப்பாக்கி சூடு: இருவர் பலி
மனிலா:
தெற்கு பிலிப்பைன்ஸின் சாம்போங்கா நகரில் உள்ள அடெனியோ டி சாம்போங்கா உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இத்துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிலமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகர மேயர் கைமர் அடான் ஓலாசோ கூறுகையில், உயிரிழந்த இருவருமே மாணவர்கள் என்றும் அதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய தாக்குதல்காரர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்
அத்துடன் தாக்குதல்காரர் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த கொடூர சம்பவத்தை நடத்தியதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் உயிரிழப்புகளோ அல்லது புதிய காயங்களோ எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பிலிப்பைன்ஸில் கடந்த ஜூன் மாதம் டக்ளோபன் நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாயினர்.
அந்த துயரச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குள் தற்போது இரண்டாவது முறையாக இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2026, 4:01 pm
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தேசியநாள் பற்றுறுதி கொண்டாட்ட விழா
August 18, 2026, 10:37 am
Coca Cola உள்ளிட்ட குளிர்பான தயாரிப்புகளை Turkish ஏர்லைன்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது
August 17, 2026, 3:50 pm
ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை முடக்கம்; காசா அமைதி முயற்சிகள் தீவிரம்
August 17, 2026, 10:50 am
பிரேசிலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
August 16, 2026, 10:40 am
முனைவர் எச். எம். சலீமின் இரு நூல்களை மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை வெளியிட்டார்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
