செய்திகள் உலகம்
பிரேசிலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி
ரியோ டி ஜெனெய்ரோ:
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு வடக்கே உள்ள மலைப்பகுதியான பெட்ரோபோலிஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பேருந்தில் சிக்கியிருந்த சில பயணிகளை மீட்க, தீயணைப்பு வீரர்கள் தோண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விபத்து நடந்த இடத்தில் மொத்தம் 49 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற மத விழாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தொடர் விபத்துகள் பிரேசிலில் சாலைப் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 3:50 pm
ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தை முடக்கம்; காசா அமைதி முயற்சிகள் தீவிரம்
August 16, 2026, 10:40 am
முனைவர் எச். எம். சலீமின் இரு நூல்களை மூத்த துணை அமைச்சர் முரளிப் பிள்ளை வெளியிட்டார்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
